யாழ்(jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(B.S.M. Charles) மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்றது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
சட்டவிரோத செயற்பாடுகள்
குடிநீர் பிரச்சினை, வீதி சீரின்மை, காணி பிணக்குகள், போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான் முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திலும், முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளிலும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் இதன்போது குறிப்பிட்டனர்