கனடாவின் ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நகரின் மேற்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வெளியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவரை காப்பாற்றுவதற்கு உயிர் காப்பு படையினர் மேற்கொண்ட முயற்சி வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.