புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோசமான வானிலையின் போது வானொன்று இரண்டு முச்சக்கர வண்டிகளை முந்திச்செல்ல சென்றபோது, எதிர்திசையில் கீபேட் ஒன்று ஓடியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தை தவிர்ப்பதற்காக வான் சாரதி இடது பக்கம் திருப்பிய போது முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.