லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தலைவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் உறுதியான கட்டுப்பாட்டுப் பகுதியான Dahiyeh-வில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள கோலன் குன்றுகள் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலுக்கு இவரே பொறுப்பாளியென இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், அவர்களின் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்த தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.