தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், விஜய் பற்றிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால், சர்க்கார் படத்தின் படப்பிடிப்பின் போது, கீர்த்தி சுரேஷ் தன் மகாநதி படத்தின் சில காட்சிகளை விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதை பார்த்து விஜய் மிகவும் அசந்துபோனார்.
அந்த காட்சிகளை பார்த்த பிறகு, “நிச்சயம் உனக்கு தேசிய விருது கிடைக்கும்” என்று விஜய் உறுதியாகக் கூறினார்.
அவர் சொன்ன விஷயம் உண்மையானது. தேசிய விருது வென்றவுடன் விஜய் சொன்ன வார்த்தை தான் அவருக்கு ஞாபகம் வந்ததாக கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.