வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் , வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 03 மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பி சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில்,